மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கும் ஏற்றது; அரசியலுக்கும் நல்லது; காரியத்திற்கும் உகந்தது.
மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்து வைத்துக் கொள்வதால்; மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல; மத்திய அரசுக்கென்று புதிய வலிவு ஏதும் ஏற்பட்டுவிடாது என்றார் பேரறிஞர் அண்ணா . அவர் வழி வந்த தலைவர் கலைஞர் “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி “ என்ற முழகத்தை வைத்தார் .
இல்லாத இந்திய தேசியத்தை கட்டமைக்கும் முயற்சியில் திணிக்கப்படும் ஒரே மதம் ஒரே மொழி என்னும் சித்தாந்தம் ஒரு கட்சி – ஒரு ஆட்சி என்ற சர்வாதிகாரப் போக்கை நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் “ மாநில சுயாட்சி “ .
மாநில சுயாட்சியை பற்றிய சிறு முன்னுரையே “ மாநில சுயாட்சி – In A Nut shell “