திராவிடக் கருத்தியலின் அடையாளமாய் விளங்கும் கருஞ்சட்டை அணியத் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவுபெற உள்ளது. அன்றைய காலகட்டத்தில், கருஞ்சட்டை சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். முதல் கருப்புச்சட்டைப் படை மாநாடு மதுரையில் 1945 ஆம் ஆண்டு நடைபெற்றபோது, பெரிய கலவரம் தூண்டிவிடப்பட்டது. மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டது. கருஞ்சட்டைப்படை அமைப்பினர் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினர். அந்த நிகழ்வைக் கண்டு மனம் கொதித்த அண்ணா, தனது கொதிப்பை எழுத்து வடிவில் கொண்டு வர எழுதியதே “மரண சாசனம்” என்னும் கட்டுரை. இக்கட்டுரை திராவிட நாடு இதழில் 26.05.1946 அன்று வெளியானது.
இந்து சனாதனப் பேராபத்து நம்மைச் சூழ்ந்து நிற்கும் வேளையில் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நம்மை ஆயத்தம் செய்து கொள்ள அண்ணாவின் எழுத்துகள் நமக்குத் துணை நிற்கும்.